தமிழர்களின் ஆர்ப்பாட்டத்தின் மத்தியில் தப்பியோடிய மகிந்த ராஜபக்‌ஷ!!


சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ லண்டன் வந்தடைந்துள்ள பின்புலத்தில், நேற்று அவர் தங்கியுள்ள ஹில்டன் தங்ககத்திற்கு முன்பாக பிரித்தானியாவாழ் தமிழ் மக்கள் ஒன்று திரண்டு பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மத்தியில் மகிந்த ராஜபக்‌ஷ கறுப்புக் கண்ணாடிகளால் மறைக்கப்பட்ட கார் ஒன்றில் பாதுகாப்பாக தான் கலந்துகொண்ட நிகழ்வுகளுக்குச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நயினாதீவில் சிறிலங்கா கடற்படையினரின் கைக்குண்டு வெடித்து சிறுவன் பலி!


நயினாதீவில் சிறிலங்கா கடற்படையினரால் கைவிடப்பட்ட கைக்குண்டு ஒன்று வெடித்ததில் 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். தர்மலிங்கம் ரூபன் என்ற சிறுவனே உயிரிழந்தவராவார்.
இவர் நயினாதீவு நாகபூசனி அம்மன் கோவில் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த தனது தந்தையின் மீன்பிடிப்படகின் அருகே கிடந்த மர்மப்பொருள் ஒன்றை எடுத்து கையாண்ட போதே வெடித்துள்ளது.

 
Design by Free Wordpress Themes | Bloggerized by Free Blogger Templates | Walgreens Printable Coupons